
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி என்ற வகையில் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் . 2025ஆம் ஆண்டில் எமது கல்லூரியானது பல்வேறுபட்ட சோதனைகளைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.
கல்லூரியின் பீடாதிபதி என்ற வகையில் கல்லூரி வளர்ச்சிக்கும் ஆசிரிய பயிலுநரின் தொழில் வாண்மை மற்றும் ஆளுமை விருத்திக்கும் கல்விசார் கல்விசார ஊழியரின் வெற்றிகளுக்கும் உடல் ஆளுமை ஆரோக்கியத்தையும் தந்த இறைவனுக்கு நன்றிகளைக்கூறி இவ்வருட அறிக்கையினைச் சமர்ப்பிக்கின்றேன்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளது தூரநோக்கு பணிக்கூற்று நோக்கங்கள் என்பன பின்வருமாறு அமைகின்றன.
உலக முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வாண்மைத்திறன் நிறைந்த ஓர் ஆசிரியரை சேவை முன்பயிற்சி மற்றும் தொடருறு கல்வி அபிவிருத்தி மூலம் உருவாக்குதல்
பீடாதிபதி. உப்பீடாதிபதிகள், கல்வியியலாளர்கள் மற்றும் கல்விசாராப் பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும். உறுதியுடனும். கல்லூரிச் சமூகமாக ஒன்றிணைந்து எமது தேசத்திற்கான உயர்வான எண்ணங்களுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்குவோம்.
உயர்வான எண்ணங்களுடன் கூடிய கௌரவமான வாண்மைத்துவம் மிக்க ஆசிரிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு தேவையான வினைத்திறன் ஊக்கம் ஆராய்வு நாட்டம் கொண்ட தேசிய கல்வி நோக்கங்களை பூரணப்படுத்துவதற்கு இயலுமான தொழில் தேர்ச்சிகளை மற்றும் அர்ப்பணிப்புக் கொண்ட ஓர் ஆசிரியரை பாடசாலைக்கு வழங்கல்
மேற்கண்டவாறு அமையும் தேசிய கல்வியியற் கல்லூரிகளது தூரநோக்கு, பணிக்கூற்று நோக்கங்கள் என்பவற்றின் அடிப்படையிலும், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் தூரநோக்கு பணிக்கூற்று அடிப்படையிலும் எமது செயற்பாடுகள் அணியாக முன்னெடுக்கப்ப டுகின்றன.
கல்விசார் உத்தியோகத்தர்கள்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உயிரோட்டமான இயக்கத்திற்கு இதய நாதமாக இருப்பவர்கள் கல்விசார் பணியாளர்கள் ஆவர். 69 கல்விசார் பணியாளர்களைக் கொண்டு எமது கல்லூரி தரமான சேவையை வழங்குகிறது. தரமான ஆசிரியர் கல்வி என்பது தரமான ஆசிரிய கல்வியியலாளர்களின் பணியாக அமைகின்றது. வகுப்பறைச் செயற்பாடுகளிலும் ஆய்வுகள், செயற்றிட்டங்களில் ஆசிரிய மாணவர்களை ஈடுபடுத்துவதிலும் எமது ஆசிரிய கல்வியியலாளர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றனர். இணைப்பாடவிதான செயற்பாடுகளை திட்டமிட்டு முறைப்படுத்துவதிலும் கல்வித்தரமேம்பாடு, நிதிநிர்வாக செயற்பாடுகள் என்பவற்றில், பங்களிப்புப் செய்வதிலும் ஆசிரிய கல்வியியலாளர்கள் ஈடுபடுகின்றார்கள். கட்டுறுப்பயில்வு மேற்பார்வை, கணிப்பீடுகளை நடாத்துதல், கற்பித்தல் பயிற்சி மேற்பார்வை மாணவ ஆசிரியர்களின் நலன்புரி விடயங்கள் என்பவற்றிலும் சிறப்பாக தமது கடமைகளை ஆற்றுகின்றனர்.
மேலும் 05.07.2025 இல 51 புதிய ஆசிரிய கல்வியியலாளர்களும், இடமாற்றம் பெற்று மூன்று ஆசிரியகல்வியியலாளர்களும் எமது பணிக்குழுவில் இணைந்தனர். எனினும் அரசியல் தலையீடு மற்றும் சேவைக்காலம் என்பவற்றின் கீழ் பழைய ஆசிரிய கல்வியியலாளர்கள் 13 பேரும் புதிய ஆசிரிய கல்வியியலாளர்கள் 7 பேரும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர இதில் கவலைக்குரிய விடயமாக மேலும் 15 பேர இணைப்பில் சென்றுள்ளனர் எனினும் தற்போது 53 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் கல்விசார் செயற்பாடுகள் இணைப்பாட செயற்பாடுகளின் தரம் அக்கறை மிக்கதோர் அர்ப்பணிப்பான கல்வியியலாளர்களின் பூரண ஒத்துழைப்பினாலேயே சாத்தியமாயிற்று. போதிபதி என்ற வகையில் மாணவ ஆசிரியர்களின் நலனில் அக்கறையுடன் செயலாற்றும் அனைத்து ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
கல்விசாரா உத்தியோகத்தர்கள்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உயிரோட்டத்துக்கு அடித்தளமாக அமையும் மற்றொரு தொகுதியினர் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆவார். எம்முடன் இதுவரை பணியாளர் மூவர் இணைந்துள்ளனார். இவர்களில் இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனார். மேலும் ஒருவர் தொடர் பணியில் உள்ளார். உத்தியோகத்தர்க ளுக்கான பணிவெற்றிடம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் ஏனைய பணிக்கமை அதிகரித்துள்ள போதும் சோர்வடையாமல் தமது பணியினை நிறைவேற்றுகின்றனர். எமது கல்விசாராப் பணியாளர்களது சேவை மனப்பாங்கு போற்றப்படுகின்றது.
கல்விசாரா ஊழியர்கள் விடயத்தில் அரசியல் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் எமது கல்லூரியில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற இரு காவலாளிக்குப் பதிலாக எவரும் நியமிக்கப்படவில்லை. அதில் ஒருவருக்கு கல்வி அமைச்சின் செயலாளரினால் ஆறு மாதங்கள் நீடித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியுள்ளது. புதிய முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. எனவே கல்விசாரா செயற்பாடுகள் மேலும் இடர்பாட்டுக்குள் சென்று கொண்டு இருக்கின்றன.
பதிவாளர் திரு.க.சுகுமார் அவர்கள் தமது பணிகளைச் செவ்வனே செய்து கல்விசாராப் பணியாளர்களை ஒருங்கிணைப்பதில் பெரிதும் உதவுகிறார். அவருக்கும் அவரின் அணியினருக்கும் எமது பாராட்டுகள்.
Let’s build up the respected profession of teachers of creative abilities and moral mind with higher potentiality of thoughts.
Let’s build up the respected profession of teachers of creative abilities and moral mind with higher potentiality of thoughts.
Copyright © 2026 VNCoE. Powered by iTek solutions
Copyright © 2026 VNCoE. Powered by iTek solutions
