மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களின் சக்திநடனம் இடம்பெற்றது. இவர்களுக்கான நடனத்தை சிரேஸ்ட விரிவுரையாளர் ஸ்ரீமதி .கிருபாகரி யாேகராஐா அம்மையார் அவர்கள்நடன வடிவம் நெறியாள்கை செய்திருந்தார்.



